எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்கள் வேண்டும் – ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜராகி சாட்சி அளித்தார்.
இந்த நிலையில் எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.எம்ஜிஆர்-ஐ வெளிநாடு அழைத்துச் செல்ல எதனடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது எனவும் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
34 ஆண்டுகளுக்கு பிறகு எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆரை வெளிநாடு அழைத்து செல்ல எதன் மூலம் முடிவெடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது.
எம்.ஜிஆர் சிகிச்சை ஆவணங்களை 23 ந்தேதிக்குள் ஒப்படைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.